Tuesday 10 September 2019

ஆறு மணி நேரம் கணவனை கால் கடுக்க நிற்க வைத்த அன்பு மனைவி



விமான பயணத்தின் போது தன் மனைவியின் சுகமான தூக்கத்திற்காக 6 மணி நேரம் தொடர்ச்சியாக நின்றுகொண்டே பயணித்த கணவனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோர்ட்னி லீ  ஜான்சன் என்பவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் அந்தப் பெண்ணின் கணவர் தன் மனைவியின் அருகே நின்று கொண்டிருக்கிறார் அருகில் அவரது மனைவி மூன்று இருக்கைகளிலும் சேர்த்து படுத்து சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார் தன் இருக்கையை மனைவிக்காக விட்டுக்கொடுத்து இந்த கணவர் விமான பயணத்தில் ஆறு மணி நேரம் நின்று கொண்டே பயணம் செய்துள்ளார். இதுதான் காதல் என்று அந்த டிவீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புகைப்படம் டிவிட்டரில் வைரல் ஆனதை தொடர்ந்து பலரும் அந்த கணவரை புகழ்ந்தும், கணவரை நிற்கவைத்து கொண்டு சுகமாக தூங்கிய மனைவியை ஒரு சிலர் திட்டியும் டிவீட் செய்துள்ளனர்.

இந்த ட்வீட்டை பார்த்தவர்களில் ஒருவர் இதுதான் உண்மையான காதல் என்று டிவீட் செய்துள்ளார், இன்னொருவர் இதற்குப் பெயர் காதலே இல்லை, இது அந்தப் பெண்ணின் சுயநலமே, அந்தப் பெண் தன் கணவனின் மடியிலோ அல்லது தோள்பட்டையிலோ தலை வைத்து படுத்து தூங்க கூடாதா? காதல் இருந்தால் இப்படி செய்திருக்க மாட்டார் என்று டுவிட் செய்துள்ளார். 


இன்னொரு பெண் "என்னுடையவர் பத்து நிமிடம் கூட இப்படி நிற்பதை நான்  அனுமதிக்க மாட்டேன், நிச்சயமாக அவர் மடியில் தலை வைத்து தூங்கியிருப்பேன், அது இன்னும் வசதியாக இருக்கும் அல்லது இருக்கையில் சரியாக அமர்ந்து ஓய்வெடுதிருப்பேன், உங்களுடயவரை இப்படியா ஆறு மணி நேரம் நிற்க வைப்பீர்கள்" என்று கேட்டு பதிவிட்டுள்ளார்.

இன்னொருவர் இது சுயநலம் என்று டைட்டானிக் படத்தில் இடம்பெறும் ஜாக் தன்னுயிரை கொடுத்து ரோஸ் நீரில் மூழ்காமல் காப்பற்றும் காட்சியை பதிவிட்டுள்ளார்.
இன்னொரு பெண் "என் கணவரும் இப்படிப்பட்ட அன்பு கொண்டவர் தான், அவரும் இப்படி தான் செய்வார், ஆனால் அவரிடம் இப்படி ஒன்றை கேட்கும் குணம் கொண்ட மனைவி அல்ல நான்" என்று பதிவிட்டுள்ளார்.
----------------------------------------------------------------------------------------- -------------------------------------
--------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
-----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்